கடந்துவந்த பாதைகளோ முட்கள்
நாம் வீணடித்த நாட்களே ஏராளம்
வாழ்வின் பொருள் விளங்க
பிறந்ததன் நோக்கம்மிளிர
நம் பணிகளை உணர்ந்து
கோர்த்த கரங்களுடன்
உலகை வெல்வோம்.!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென
சொல்லிவைத்த மூதாதையர்
நம் எண்ணமறிந்தே சொல்லிச்சென்றனர்.
காலத்தின் பிடியிலகப்பட்டு நாம்
காலடித்தடத்தைத் தொலைக்கது – எம்
இனத்தின் விடிவுக்காய் -ஒன்றுபட்டு
உழகை;கும் தருணமிது!
வாடிப்போனமலர் பூக்காதென்பது எவ்வளவு நிஜமோ
அவ்வளவு நிஜம் உயிர்த்தெழாத சமூகம் பிழைக்காதென்பதும்!
கோடிட்டுக்காட்டிவிட்ட தலைவனுண்டு நமக்கு - இன்னும்
தலைவனே கிடைக்காத சமூகங்களுமுண்டு தரணியில்!
பாழ்பட்டுப்போன இனத்தின் கடைசி நாடித்துடிப்பில்கூட
அதிசயங்கள் நிகழ்த்திவிட எம் பரம்பொருளின் கருணை உண்டு!
கடவுள்நம்;பிக்கை மறுப்போர்கூடி செய்திட்ட சதிகள் பொடித்து
சரணாகதியடையும் காலமதும் புலரும் விரைவில்
நம்பிச்சரண் புகுந்தே நானிலத்தோர் வாழ வணங்கிடுவோம்!
-பிரணவன்-
நாம் வீணடித்த நாட்களே ஏராளம்
வாழ்வின் பொருள் விளங்க
பிறந்ததன் நோக்கம்மிளிர
நம் பணிகளை உணர்ந்து
கோர்த்த கரங்களுடன்
உலகை வெல்வோம்.!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென
சொல்லிவைத்த மூதாதையர்
நம் எண்ணமறிந்தே சொல்லிச்சென்றனர்.
காலத்தின் பிடியிலகப்பட்டு நாம்
காலடித்தடத்தைத் தொலைக்கது – எம்
இனத்தின் விடிவுக்காய் -ஒன்றுபட்டு
உழகை;கும் தருணமிது!
வாடிப்போனமலர் பூக்காதென்பது எவ்வளவு நிஜமோ
அவ்வளவு நிஜம் உயிர்த்தெழாத சமூகம் பிழைக்காதென்பதும்!
கோடிட்டுக்காட்டிவிட்ட தலைவனுண்டு நமக்கு - இன்னும்
தலைவனே கிடைக்காத சமூகங்களுமுண்டு தரணியில்!
பாழ்பட்டுப்போன இனத்தின் கடைசி நாடித்துடிப்பில்கூட
அதிசயங்கள் நிகழ்த்திவிட எம் பரம்பொருளின் கருணை உண்டு!
கடவுள்நம்;பிக்கை மறுப்போர்கூடி செய்திட்ட சதிகள் பொடித்து
சரணாகதியடையும் காலமதும் புலரும் விரைவில்
நம்பிச்சரண் புகுந்தே நானிலத்தோர் வாழ வணங்கிடுவோம்!
-பிரணவன்-
Yes Unmai.
ReplyDeleteYes Unmai.
ReplyDelete